ஷங்கர்ராமசுப்ரமணியன் திருநெல்வேலி டவுணில் சந்திப்பிள்ளையார் முக்கின் இடதுபுறம் உள்ளடங்கி இருக்கும் கல்லூர் பிள்ளைக் கடையில் பின்னரவில் பரிமாறப்படும் இட்லியை விள்ளும்போது ஆவி இப்போதும் வெளியேறுகிறது இட்லியில் ஆவியைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது ஆவிகள் என்று சொன்னால் அர்த்தம் விபரீதமாகி விடும் இருந்தும் திருநெல்வேலியின் ஆவி இட்லியில் மிச்சம் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம்.