Skip to main content

நள்ளென் றன்றே யாமம்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் 

 நள்ளென் றன்றே யாமம்
 சொல்லவிந்து சடலங்களாய்
 பேருந்தில்
 உடல்சுருட்டியடங்கினர் மக்கள்
 இருட்டில் முனகும் சல்லாபப் பாடல்கள்
 உதிர்ந்து வரும் திருவள்ளுவர் சித்திரம்
 பொன்மொழிகள்
 அதிகாலையில் இறங்கவிருக்கும் நகரம் குறித்த நினைவு
 எதுவுமல்ல
 ஆம்
 உண்மைதான் பதுமனார் அவர்களே
 பற்றித் தள்ளும் விருப்பும் வெறுப்பும்
 அலைக்கழிப்புகளும் அல்ல
 உறக்கமும் பனியும் தான்
 அவர்களைத் தாயென கதகதப்பாக
 தற்காலிகமாகப் போர்த்தியிருக்கிறது.     

Comments