Skip to main content

பாலத்தின் மீது காதலர்கள்



ஷங்கர்ராமசுப்ரமணியன்

அவன்
ஏரியை நோக்கி
வெளியே அந்தரத்தில்
கால்களை சேர்த்து தொங்கவிட்டிருந்தான்
அவள் 
அவனது
தோளில்
சாய்ந்திருந்தாள்
ஒரு உடைந்த பாலத்தின் கல்நுனிதான்
ஆனால்
பெரியதொரு
மஞ்சள் சிகப்பு பூக்களாக
அவர்கள் அங்கே
ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர்
அவர்களின் அந்த சாய்மானம் போதும்
அந்த மெல்லிய கோட்டுச்சித்திரம் போதும்
சீக்கிரத்தில் மறைய இருக்கும் அந்த சாயங்காலம் போதும்
அவர்கள் அமர்ந்திருக்கும்
உடைந்த பாலத்தின் சிறுநுனி போதும்.


Comments