Skip to main content

என்று கருதும்


ஷங்கர்ராமசுப்ரமணியன்




எனது கவிதை ஒரு குட்டிநாயாக வடிவெடுக்கிறது
கருதிக்கொள்ளலாம்
எனது கவிதை ஒரு முட்டையாக இடப்படுகிறது
வைத்துக்கொள்ளலாம்
எனது கவிதை ஒரு குழந்தையாகப் பிறக்கிறது
எண்ணிக்கொள்ளலாம்
எனது கவிதை ஒரு நட்சத்திர மீன்
ஆக்கிக்கொள்ளலாம்

ஆனால்
அந்தக் குட்டிநாயைச் சுற்றி
அந்த முட்டையைச் சுற்றி
அந்தக் குழந்தையைச் சுற்றி
அந்த நட்சத்திர மீனைச் சுற்றி
வடிவம் கொண்டது தவிர
மீந்த பிறிதொன்று 
எதுவும் இல்லை
என்று கருதும்
என் கவிதையின் நியாயம்
மட்டும் புரியாத துக்கம் எனக்கு.





Comments