Skip to main content

Posts

எழுத்தாளர் இராசேந்திர சோழனுக்கு அஞ்சலி ( நேர்காணல் - மறுபிரசுரம்)

உலகளவில் கணிசமான சாதனைப் படைப்புகளையும் படைப்பாளிகளையும் கொண்ட தமிழ் சிறுகதை மரபில் இராசேந்திர சோழனின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'எட்டு கதைகள்' ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்சியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல்  தமிழ் சாத்தியம் அவர். சிக்மண்ட் ப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள் உலகளவிலும் தமிழ் படைப்புலகிலும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், பிராய்டின் சாயலேயின்றி அசாதாரணமாக மனிதர்களின் உளவியலுக்குள் குறிப்பாக ஆண்-பெண் உறவு சார்ந்த பிரமைகள், அச்சங்கள், மயக்கங்களுக்குள் பயணித்த படைப்புகள் இராசேந்திர சோழனுடையவை. வட ஆற்காடு வட்டார வழக்கை உள்வாங்கி சிறுகதை என்ற வடிவத்தின் கூர்மை, மௌனம், மொழியின் செம்மை, விமர்சன வன்மையைக் கொண்டவை. ஒரு பெண்ணின் சுதந்திரமான பாலுறவுத் தேர்வு ஆண் மனத்தில் உருவாக்கும் அச்சங்கள், கலவரங்களை அதன் பதைபதைப்புடனேயே ஆக்கிய இவரது குறுநாவலான 'சிறகுகள் முளைத்து' படைப்பு சமீபத்தில் படிக்கும்போதும் அழுத்தமான அனுபவத்தையே தருகிறது. எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான 'பறிமுதல்' முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான தி

முதல் இந்துக் கடவுளாக ராமன் - சீனிவாச ராமாநுஜம் (மறுபிரசுரம்)

இந்தியாவின் முதல் இந்துக் கோயில் உதயமாகப்போகிறது. ராமர்தான் மூலவர். கோயில் என்று நாம் எதை அர்த்தப்படுத்தினாலும் , இந்த இந்துக் கோயில் தெய்விகத்தை அடையாளப்படுத்தவில்லை ; அடையாளப்படுத்தவும் முடியாது.இந்தக் கடவுளான ராமன், நவீன தேசிய – அரசு – மூலதனத்தின் அவதாரம் . மிக நெடுங்காலமாக உருவாக்கத்திலிருந்த கடவுள் இவன். இந்தியா என்று நாம் இப்போது அழைக்கும் நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பல நூற்றாண்டுகளாக அலைந்த ராமனிலிருந்து வேறுபட்டவன் இந்த ராமன். அவனைப் பற்றி ஏற்கெனவே இருக்கும் கதைகளுடன் புதிய சேர்க்கையாகச் சேர்பவன் அல்ல இந்தப் புதிய ராமன். இவன் ஒரு புதிய கதையை உருவகிப்பவன்.  இந்து என்று தயாராகிவருகிற ஒரு சமயத்தின் கடவுள் இவன். இவனுக்கு இறந்தகாலமோ எதிர்காலமோ இல்லை. இவனுக்கு நிகழ் மட்டுமே உண்டு. சீதா அல்லது லக்ஷ்மணன் அல்லது அனுமனை இவனது இப்பக்கத்தில் துணைகளாக்க முடியுமா என்று சந்தேகம்கொள்கிறேன். இவன் தசரத மன்னனின் மகனும் அல்ல. இவன் ராமன் ; இறந்த காலமோ எதிர்காலமோ இல்லாத தனி ராமன். விஷ்ணுவின் பதினொன்றாவது அவதாரம் இவன். இன்னமும் அவதரிக்காத பத்தாவது அவதாரமாகவும் இருக்கலாம். அத்துடன் இந

லவ் இன் தி டைம் ஆஃப் காலரா

காதலின் அளவற்ற ஆற்றலையும் அதன் வசீகர ஈர்ப்பையும் சொல்லும் மகத்தான நவீன செவ்வியல் படைப்பு, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’. அவர் ஒரு பியானோ இசைஞனாக அளவற்ற காதலை நறுமண இசையாகப் பரப்பிய பிரத்யேகப் படைப்புதான் இந்நாவல். கவித்துவத்தின் இசைமையும் எந்தக் கலாச்சாரத்தவரும் உணரும் அன்றாடத் தருணங்களின் மீதான கூர்மையான அவதானிப்பும் கொண்டது. காதல் என்ற உணர்வுநிலை தரும் நோய்த்தன்மை, ஆறாத ரண உணர்வு ஆகியவற்றோடு அதன் வீண்தன்மையையும் ஆழமாகப் பேசுவது. காதலில் இருக்கும், காதல்கொள்ளப்போகும் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்க வேண்டியது. இந்த நாவலின் தொடக்கமே இப்படி இருக்கிறது. ‘அது தவிர்க்க முடியாதது: கசந்த வாதுமைகளின் வீச்சம் எப்போதும் நிறைவேறாத காதலுக்கு நேரும் விதியைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்தும்.’ பிராயத்தில் பித்துப் பிடித்ததைப் போலத் தொடங்குகிறது நாயகன் ப்ளோரென்டினா அரிஸாவின் காதல். நாயகி பெர்மினா டாசா அவளது தந்தையால் வேறு ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்ட பிறகும், கவித்துவமான கடிதங்களால் பற்றியெரிகிறது. ஒருகட்டத்தில் பிள்ளைப் பருவக் கனவுதான் தனது காதல் என்ற முடிவுக்கு நாயகி

ந. ஜயபாஸ்கரனின் ‘இல்லாத இன்னொரு பயணம்’

‘ இல்லாத இன்னொரு பயணம் ’ என்று தனது கவிதைத் தொகுப்புக்குப் பெயரிட்டு ந . ஜயபாஸ்கரன் தனது ‘ அன்னப் பாடல் ’ ( SWAN SONG)- ஐ எழுதியுள்ளார் .                  ‘ முதன் முதலாகத் தமிழ்க் கவிஞன் தன் மூல ஆதாரத்தை தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி ’ என்று நகுலனால் துவக்கத்தில் வரையறுக்கப்பட்ட ந . ஜயபாஸ்கரனின் கவி இருப்பு , மரபுக்குள் புராணிகத்துக்குள் வரலாற்றுக்குள் உணர்வுக்குள், விலக்கப்பட்டதையும் விலக்கப்பட்டவர்களையும் தேடித் தேடி, அடிக்குறிப்புகளையிட்டு , நிகழில் இல்லாதது போன்ற ஒரு பழைய தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டே நவீன கவிதையின் தவிர்க்க இயலாத இருப்பாக மாறி நின்றுள்ளது . குத்தும் விழிப்பின் உணர்வை விலக்காத தன்பரிவின் மொழியை தனியான த்வனியாக ‘ இல்லாத இன்னொரு பயணம் ’ தொகுதியில் ஒரு வெற்றியைச் சாதித்துமுள்ளார் ஜயபாஸ்கரன் . எமிலி டிக்கன்ஸன் , குருதத் , திருப்பூவனத்து பொன்னனையாள் , அங்கம் வெட்டுண்ட பாணன் , ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவையோடு

இகவடை பரவடை - அகழில் வெளிவந்த உரையாடல்

இகவடை பரவடை” கவிதை நூலினை கவிஞர் தாமரை பாரதி விமர்சனபூர்வமாக அணுகி அகழ் தளத்துக்கு ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். அக்கட்டுரை குறிப்பிட்ட நூல் பற்றியதாக மட்டும் இருக்கவில்லை. “குறுங்காவியம்” எனும் வடிவத்தை நவீன கவிஞர்கள் கையாளும் விதம் பற்றியும் அதில் விமர்சனங்கள் இருந்தன. எனவே கட்டுரையை நூலாசிரியர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் பகிர்ந்து அதையொட்டி ஓர் உரையாடலும் நிகழ்த்தினோம். அவருக்கும் கட்டுரை அனுப்பிய தாமரைபாரதிக்கும் நன்றி. -அகழ் ஆசிரியர் குழு கவிஞர் தாமரை பாரதியின் விமர்சனத்தைப் படிப்பதற்கு : https://akazhonline.com/?p=5817 கேள்வி: “இகவடை பரவடை” நூலுக்கு ஏன் குறுங்காவியம் என்று அடைமொழி சூட்டினீர்கள்? பதில்: சிறுவனாக இருந்து பெரியவனாக ஆகும் ஒருவனின் படம் இதன் கதை இழையாக உள்ளது. இரண்டு நகரங்கள், இரண்டு மனுஷிகள், சில பருவங்கள், சில பிராணிகள், தாவரங்கள் இவையெல்லாம் நில, மனப்பரப்பாக இதில் விரிந்துள்ளன. தனிநபர் ஒருவனின் அறிவுத் தோற்றமும், ஒரு கலாசாரத்தின் அறிவுத்தோற்றமும், கால, விழுமிய, அரசியல் மாற்றங்களின் சித்திரங்களும் உள்ளன. எனது கவிதை உள்ளடக்கம் சார்ந்த பார்வையை உருவாக்கிய கவிஞர் கலாப்ரி